ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு |

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான இந்த பதிவை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் அந்தப் பதிவைப் பகிர்ந்தனர். பலர் ஓவியாவை விமர்சித்தும், கண்டித்தும் பதிவுகளை வெளியிட்டனர்.
பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளாரும், பாஜக நிர்வாகியுமான நடிகை காயத்ரி ரகுராமும் ஓவியாவைக் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதோடு ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சார்பில் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம் என பதிவிட்டுள்ளார்.




