கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான இந்த பதிவை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் அந்தப் பதிவைப் பகிர்ந்தனர். பலர் ஓவியாவை விமர்சித்தும், கண்டித்தும் பதிவுகளை வெளியிட்டனர்.
பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளாரும், பாஜக நிர்வாகியுமான நடிகை காயத்ரி ரகுராமும் ஓவியாவைக் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதோடு ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சார்பில் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம் என பதிவிட்டுள்ளார்.