விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் லூசிபர். மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய் நடித்திருந்தனர் நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் சிரஞ்சீவி நயன்தாரா நடிக்கிறார்கள், மோகன் ராஜா இயக்குகிறார்.
இது சிரஞ்சீவியின் 153வது படமாகும். கொனிடல்லா தயாரிப்பு நிறுவனம், சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கம் ஐதராபாத் பிலிம் சிட்டியில் நேற்று நடந்தது. இதில் அல்லு அரவிந்த், அஸ்வினி தத், டிவிவி தனய்யா, நிரஞ்சன் ரெட்டி, நாகபாபு, இயக்குநர் கொரட்டல்லா சிவா, தயரிப்பாளர்கள் தாகூர் மது, ஜெமினி கிரண், கோபி அசந்தா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா கூறியதாவது: சிரஞ்சீவியின் திரைப்படத்தை இயக்குவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிச்சயமாக இத்திரைப்படம் உருவாக்கப்படும். நாங்கள் ஒரிஜினல் கதையை அப்படியே ரீமேக் செய்யவில்லை. மூலக்கதையை எடுத்துக் கொண்டு சிரஞ்சீவிக்கு ஏற்ப கதையை மெருகேற்றி மாற்றியிருக்கிறோம். என்றார்.