போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் லூசிபர். மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய் நடித்திருந்தனர் நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் சிரஞ்சீவி நயன்தாரா நடிக்கிறார்கள், மோகன் ராஜா இயக்குகிறார்.
இது சிரஞ்சீவியின் 153வது படமாகும். கொனிடல்லா தயாரிப்பு நிறுவனம், சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கம் ஐதராபாத் பிலிம் சிட்டியில் நேற்று நடந்தது. இதில் அல்லு அரவிந்த், அஸ்வினி தத், டிவிவி தனய்யா, நிரஞ்சன் ரெட்டி, நாகபாபு, இயக்குநர் கொரட்டல்லா சிவா, தயரிப்பாளர்கள் தாகூர் மது, ஜெமினி கிரண், கோபி அசந்தா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா கூறியதாவது: சிரஞ்சீவியின் திரைப்படத்தை இயக்குவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிச்சயமாக இத்திரைப்படம் உருவாக்கப்படும். நாங்கள் ஒரிஜினல் கதையை அப்படியே ரீமேக் செய்யவில்லை. மூலக்கதையை எடுத்துக் கொண்டு சிரஞ்சீவிக்கு ஏற்ப கதையை மெருகேற்றி மாற்றியிருக்கிறோம். என்றார்.