தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

வி.இசட்.துரை இயக்கத்தில் இயக்குனர் அமீர் நாயகனாக நடித்துள்ள அரசியல் படம் நாற்காலி. சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின், “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற பாடலை மறைந்த 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். இப்பாடலை எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜன., 16) முதல்வர் பழனிசாமி வெளியிட, அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொள்கிறார்.
நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.இறுதிக்கட்ட பணிகள் முழுவேகத்துடன் நடக்கிறது. வரும் மார்ச் மாதம் திரையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.




