பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை |

வி.இசட்.துரை இயக்கத்தில் இயக்குனர் அமீர் நாயகனாக நடித்துள்ள அரசியல் படம் நாற்காலி. சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின், “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற பாடலை மறைந்த 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். இப்பாடலை எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜன., 16) முதல்வர் பழனிசாமி வெளியிட, அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொள்கிறார்.
நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.இறுதிக்கட்ட பணிகள் முழுவேகத்துடன் நடக்கிறது. வரும் மார்ச் மாதம் திரையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.