ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் |
தமிழ்த் திரையுலகில் பெரும் சாதனை படைத்த 'சின்னத்தம்பி' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடைபெற்றது.
அப்போது நடிகர் விஷால் தன்னுடைய மேலாளரை அனுப்பி மறைந்த தயாரிப்பாளர் பாலு தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்த படத்தின் பூஜை ஸ்டில்லைக் காட்டி உறுதி ஒன்றை அளித்துள்ளார்.
மார்ச் மாதம் அப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்தி, ஆறு மாதத்திற்குள் நடத்தி முடித்து அந்தப் படம் மூலம் வரும் லாபத் தொகை அனைத்தையும் மறைந்த தயாரிப்பாளர் பாலு குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விஷாலின் அந்த உதவியை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாலுவின் குடும்பத்தினரும் மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனராம். மேலும், தயாரிப்பாளர் பாலு, விஷாலுக்கு அட்வான்ஸ் ஆக வழங்கிய தொகையான 50 லட்ச ரூபாயையும் விஷால் திருப்பி அளித்துவிட்டாராம்.
விஷாலின் இந்த பேருதவியை மற்ற தயாரிப்பாளர்களும் வரவேற்று அனைவரும் இந்த படத்திற்கு ஒத்துழைப்பு தருவதாகக் கூறியுள்ளார்கள்.