அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா? | விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சி | மகாபலிபுரத்துக்கு சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் | கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள் | மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம் | கேஜிஎப் 2வால் ஷங்கருக்கு ஏற்பட்ட பெரியப்பா அனுபவம் | விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்? | தனுஷின் தயாரிப்பு நிறுவன யு-டியூப் பக்கம் முடக்கம் | 'சலார்' - பிரமோஷன் வேலைகள் இனிதே ஆரம்பம் | செளந்தர்யாவிடம் மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் - விக்னேஷ் கார்த்திக் |
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்துள்ள 'ஈஸ்வரன்' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டில் பேசிய சிம்பு, ''இப்போதெல்லாம் நெகட்டிவிட்டி தான் அதிகம் உள்ளது. போட்டி, பொறாமை, அடுத்தவர்களை குறை சொல்வது இதெல்லாம் தான் அதிகம் நடக்கிறது. முதலில் நாம் பிறருக்கு அறிவுரை கூறுவதையும், மற்றவர்களிடமிருந்து அறிவுரை கேட்பதையும் நிறுத்த வேண்டும். மனது சுத்தமாக இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும்.
வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டேன். அந்த சோகத்தில் அதிக எடை போட்டேன், படப்பிடிப்புக்கு சரியாக செல்ல முடியவில்லை. ஆனால் இறைவன் என்னுடன் இருந்து எல்லாவற்றையும் மாற்றினார். கடவுள் வேறு எங்கும் இல்லை, உங்களுடன் தான் இருக்கிறார். இனி பேச ஒன்றுமில்லை செயல் தான். அடுத்ததாக மாநாடு, பத்து தல படங்களிலும் இது தவிர்த்து இன்னும் சில படங்களிலும் நடிக்கிறேன். மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம் பண்ணுகிறேன், அது தீபாவளிக்கு வெளியாகும் என்றார்.