22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்துள்ள 'ஈஸ்வரன்' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டில் பேசிய சிம்பு, ''இப்போதெல்லாம் நெகட்டிவிட்டி தான் அதிகம் உள்ளது. போட்டி, பொறாமை, அடுத்தவர்களை குறை சொல்வது இதெல்லாம் தான் அதிகம் நடக்கிறது. முதலில் நாம் பிறருக்கு அறிவுரை கூறுவதையும், மற்றவர்களிடமிருந்து அறிவுரை கேட்பதையும் நிறுத்த வேண்டும். மனது சுத்தமாக இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும்.
வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டேன். அந்த சோகத்தில் அதிக எடை போட்டேன், படப்பிடிப்புக்கு சரியாக செல்ல முடியவில்லை. ஆனால் இறைவன் என்னுடன் இருந்து எல்லாவற்றையும் மாற்றினார். கடவுள் வேறு எங்கும் இல்லை, உங்களுடன் தான் இருக்கிறார். இனி பேச ஒன்றுமில்லை செயல் தான். அடுத்ததாக மாநாடு, பத்து தல படங்களிலும் இது தவிர்த்து இன்னும் சில படங்களிலும் நடிக்கிறேன். மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம் பண்ணுகிறேன், அது தீபாவளிக்கு வெளியாகும் என்றார்.