பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்த படம், நான் எழுதி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ள செங்கோல் கதையில் உருவாகியிருக்கிறது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் குற்றம் சாட்டியதோடு, வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், சர்கார் படத்தின் கதைச்சுருக்கத்தை எழுத்தாளர் சங்கத்தலைவர் டைரக்டர் கே.பாக்யராஜிடம் முருகதாஸ் கொடுத்த பிறகு அதை படித்த அவரும் செங்கோலும், சர்காரும் ஒரே கதைதான் என்று சொன்னவர், வருண் ராஜேந்திரனுக்கு ஏதேனும் தொகையை கொடுத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமாறு கூறியிருந்தார்.
ஆனால் முருகதாஸ், சர்கார் கதை என்னுடையதுதான். அதனால் யாருக்கும் பணம் கொடுத்து சரிகட்ட வேண்டிய அவசியமில்லை என்று சொன்னவர், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பேன் எனறு கூறிவிட்டார்.
இந்த நேரத்தில், மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தை தயாரித்த தாகூர் மது என்பவர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில், கடந்த 18 ஆண்டுகளாக நான் ஏ.ஆர்.முருகதாசுடன் பயணிக்கிறேன். 5 படங்களை அவரை வைத்து தயாரித்திருக்கிறேன். அவர் மிகவும் நேர்மையானவர். அவர் சொந்தமாக சிறந்த கதைகளை எழுதக்கூடிய ஆற்றல் மிக்கவர். அதனால் இன்னொருத்தரோட கதையை படமாக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை என்று முருகதாசுக்கு ஆதரவாக தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.