இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர், வடசென்னை படத்திற்கு பிறகு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமாகிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், தெலுங்கு என் தாய்மொழி என்பதால் சில வருடங்களாகவே தெலுங்கில் நடிக்க முயற்சி எடுத்து வந்தேன். அந்த வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது. அதுவும் விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது. என் தந்தை ராஜேஷ், தெலுங்கில் 25 படங்கள் வரை நடித்தவர்.
இந்த தெலுங்கு படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராகத்தான் நான் நடிக்கிறேன். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடி என்பதை விட, ஒரு அழுத்தமான வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு பர்பாமென்ஸ் பண்ண நல்ல ஸ்கோப் உள்ள வேடம் தான். அதனால் தமிழைப்போலவே தெலுங்கிலும் இமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்காத ஒரு நடிகையாக இடம் பிடிப்பேன் என்கிறார்.




