சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர், வடசென்னை படத்திற்கு பிறகு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமாகிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், தெலுங்கு என் தாய்மொழி என்பதால் சில வருடங்களாகவே தெலுங்கில் நடிக்க முயற்சி எடுத்து வந்தேன். அந்த வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது. அதுவும் விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது. என் தந்தை ராஜேஷ், தெலுங்கில் 25 படங்கள் வரை நடித்தவர்.
இந்த தெலுங்கு படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராகத்தான் நான் நடிக்கிறேன். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடி என்பதை விட, ஒரு அழுத்தமான வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு பர்பாமென்ஸ் பண்ண நல்ல ஸ்கோப் உள்ள வேடம் தான். அதனால் தமிழைப்போலவே தெலுங்கிலும் இமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்காத ஒரு நடிகையாக இடம் பிடிப்பேன் என்கிறார்.