நடிகர்களை போன்று நடிகைகளையும் மதியுங்கள் : அனுஷ்கா கோபம் | கல்வி அறக்கட்டளை தொடங்கும் சிரஞ்சீவி | டிராகன் படத்தின் ஒருநாள் படப்பிடிப்பு செலவு 1.5 கோடியாம் | சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ராஷ்மிகா மந்தனா | துரந்தர் 2 : முதல் நாள் வசூல் எவ்வளவு? | பாலிவுட்டில் அறிமுகமாகும் பாலாஜி மோகன் | சூர்யா 47 படத்தில் ஆக் ஷனில் நஸ்ரியா | ஜெமினி தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்திற்கு இன்ஸ்பிரசேன் : சரண் | மக்களின் வாழ்வியல் பிரச்னைகளை பேசும் படங்கள் : யோகிபாபு ஆசை | பிளாஷ்பேக் : பாலிவுட்டை நம்பி கோலிவுட்டை இழந்த நிஷாந்தி |

இயக்குனர் மற்றும் சின்னத்திரை சங்க உறுப்பினர் செய்யாறு ரவி, மாரடைப்பால் காலமானார். கார்த்தி நடித்த அரிச்சந்திரா, பிரபு நடித்த தர்மசீலன் படங்களை இயக்கியவர் செய்யாறு ரவி. அதன்பின்னர் படங்கள் இயக்க வாய்ப்பு வராததால் சின்னத்திரை பக்கம் சென்றார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற சீரியல்களை இயக்கினார். தற்போது ஜீ தமிழில் உருவாகி வரும் ‛அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என்ற சீரியலை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்த நிலையில் இன்று(மார்ச் 11) பிற்பகல் 12 மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார். ரவியின் உடல் அஞ்லிக்காக சென்னையில் அசோக் நகரில் உள்ளது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. செய்யாறு ரவியின் மரணம் சின்னத்திரை திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.