துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் |
இரட்டை அர்த்த வசனங்களால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, இசையமைப்பாளர் அவதாரமும் எடுக்கப் போகிறாராம். தான் அடுத்து தயாரித்து, நடித்து இயக்கும் படத்துக்கு இவரே இசையமைக்கவும் செய்கிறார். ஆரம்பத்திலிருந்தே எஸ்.ஜே.சூர்யா படங்களின் வெற்றியில் இசைக்கு பிரதான பங்கிருக்கும். முதல் இரு படங்களுக்கு தேவாவும், அடுத்தடுத்த படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானும் இசையமைத்தனர். கடைசியாக அவர் இயக்கிய புலி படத்துக்கும் ரஹ்மான்தான் இசை. இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா தயாரித்து, இயக்கி நடிக்கும் இசை என்ற படத்திற்கு அவரே இசையமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்துள்ள பேட்டியில், இசை படத்திற்கு நானே இசையமைக்க முடிவு செய்துவிட்டேன். இசையில் எனக்கு உள்ள ஈடுபாட்டைப் பார்த்து, ஏற்கெனவே என்னை இசைமைக்கச் சொன்னார்கள். நான்தான் அப்போதெல்லாம் மறுத்து வந்தேன், என்று கூறியுள்ளார்.