விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் | பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் |
சமீபகாலமாக டோட்டல் கோலிவுட்டையே பேய் பிடித்து ஆட்டுவித்து வருகிறது. மேலும், இதற்கு முன்பு ஹீரோக்களுக்கு பேய் கதையில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆனால், லாரன்ஸின் காஞ்சனா-2வுக்கு பிறகு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு பேய் கதையில் நடிக்கும் ஆசை மேலோங்கியது.
இந்தநிலையில, அரண்மனை படத்தில் பேயாக நடித்த ஹன்சிகா அந்த படத்தின் 2ம் பாகத்திலும் முதல் பாகத்தைவிட அதிரடியான பேயாக நடிக்கப்போகிறாராம். முக்கியமாக சில படங்களில் ஆண் பேய்கள் மிரட்டியதை விடவும் இந்த படத்தில் ஹன்சிகாவை மிரட்டல் பேயாக காண்பிக்கிறாராம் சுந்தர்.சி
ஆக, இதுவரை கவர்ச்சிப்பேயாக நடித்து வந்த ஹன்சிகா இப்போது மிரட்டல் பேயாகியிருப்பதைத் தொடர்ந்து, மாயா படத்தில் நயன்தாராவும் பேயாக நடித்துள்ளார். செளகார் பேட்டையில் ராய் லட்சுமியும் பேயாக நடிக்கிறார். இப்படி பல நடிகைகளும் பேய் அவதாரம் எடுத்து வருவதைப்பார்த்து கோலிவுட்டின் த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட நடிகைகளுக்கும் கூட பேயாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வேர் விட்டுள்ளதாம்.