Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் | பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதைகளுடன் சிரஞ்சீவியை முற்றுகையிடும் தமிழ் டைரக்டர்கள்!

10 நவ, 2014 - 09:03 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. 149 படங்களில் நடித்துள்ள அவருக்கு, திடீரென்று அரசியல் ஆர்வம் ஏற்பட, பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் சில ஆண்டுகளில் அந்த கட்சியை காங்கிரசுடன் இணைத்துக்கொண்டு அரசியலை சந்தித்தார். பின்னர், மத்திய அமைச்சரானார்.

ஆனால். பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, கட்சி தேர்தலில் தோல்வியை தழுவி விட்டதால், தனது புகழை மக்கள் மத்தியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மீண்டும் சினிமாவில் நடிக்க களமிறங்கி உள்ளார் சிரஞ்சீவி. மேலும், தனது 150வது படத்தில் நடிக்க கதை தேர்வை தொடங்கினார். அதோடு சிறந்த கதையை சொல்வோருக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


இதனால் அவரைத்தேடி டைரக்டர்கள் கூட்டம் படையெடுக்கத் தொடங்கியது. அப்படி அவர் அறிவித்து 6 மாத காலமாகி விட்டது. ஆனால் இன்னமும் அவருக்கு பிடித்தமான கதை கிடைக்கவில்லையாம். அந்த வகையில் ஆந்திராவில் உள்ள கீழ் மட்டம் முதல் மேல்மட்டம் வரை உள்ள அனைத்து டைரக்டர்களும் அவரிடம் கதை சொல்லி ஓயந்து விட்டார்களாம். ஆனால் இன்னும் அவருக்கு எந்த கதையும் பிடித்தபாடில்லையாம்.


இந்தநிலையில், தற்போது தமிழ் சினிமாவில் உள்ள சில புதுமுக டைரக்டர்கள் ஆந்திராவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சிரஞ்சீவியைப் பெறுத்தவரை கதைக்கே முதலிடம் கொடுப்பதால் டைரக்டர்கள் மட்டுமின்றி, நாவல்கள் எழுதும் எழுத்தாளர்களும் தங்களிடமுள்ள மொத்த கதைகளுடன் சிரஞ்சீவியின் ஆந்திர அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)