'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் |

நடிகர் கருணாசின் மகன் கென் 'அசுரன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த நிலையில் தற்போது 'யூத்' படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குனராகவும் மாறி இருக்கிறார். இன்று படம் வெளியாகி உள்ள நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சினிமா மீது நான் காதல் கொண்ட நாள் முதல், மற்ற அனைத்தும் மெல்ல மெல்ல இரண்டாம் பட்சமாகிவிட்டன. அது வெறும் பார்வையாக மட்டும் இல்லை. என் வாழ்க்கையின் ஒன்றாக மாறிவிட்டது. எனக்கு இப்போது 24 வயது. ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வரை, என்னுடன் தங்கியிருந்த ஒரே விஷயம் சினிமாதான். எந்தவொரு சூழலிலும் சினிமா என்னை கைவிடவில்லை. 'யூத்' படத்தில் இனி வேலை செய்ய முடியாது என்பது என்னால் நம்ப முடியவில்லை.
இவ்வளவு நாட்கள் அது என் சொந்த குழந்தை போலவே இருந்தது. இத்தனை நாட்களாகத் தூங்கும் வரை அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஹீரோவாக, அழகான ஒரு கதையில் வாழ்ந்தேன். ஒரு இயக்குநராக, என்னுடைய சொந்த பாதையைக் கண்டடைந்தேன். ஒவ்வொரு ப்ரேமும் என் மனதுக்கு நெருக்கமானதாக இருந்திருக்கிறது. இந்தப் படம் என்னை உடைத்த நாட்களும் இருந்தன. என்னை உருவாக்கிய நாட்களும் இருந்தன.
ஆனால் எப்போதும் நான் ஏன் சினிமா பயணத்திற்கு வந்தேன் என்பதை இப்படம் நினைவூட்டி கொண்டே இருந்தது. இந்தப் படத்தை உங்களை மனதில் வைத்துத்தான் உருவாக்கினேன். நீங்கள் எங்கு புன்னகைப்பீர்கள், எங்கு என்னோடு இணைவீர்கள், எப்படி உணர்வீர்கள் என எப்போதும் யோசித்துக்கொண்டே இருந்தேன். என்னுடையதாக 'யூத்', உங்களுடையதாக மாறுகிறது. அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் அதனை நேசித்ததைவிட, அதிகமாக நேசியுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.