வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தனது மருமகன் அஜய் திஷானை வைத்து விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் 'பூக்கி'. 'சலீம்' படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ்சந்திரா இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார். மருமகனை வைத்து 'மார்கன்' படத்துக்குபின் இந்த படத்தை ஏன் தயாரித்தேன் என்பது குறித்து விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில், ''இந்த பட இயக்குனரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குனராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரிதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.
இந்த பட ஹீரோ அஜய் மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். ஹீரோயின் மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு - எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும்.'' என்றார்.
மேலும் 'நுாறுசாமி' படத்திலும் அஜயின் நடிப்பையும் குறிப்பிட்டார். நடிகர் அஜய் திஷான் பேசுகையில், ''இந்த படம் எனக்கு ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய அனுபவம். நான் ஒருபோதும் நினைக்காத பல விஷயங்கள் இந்த படத்தின் மூலம் நடந்திருக்கிறது. விஜய்ஆண்டனி சாருக்கு நன்றி' என்றார். இதில் முக்கியமான வேடத்தில் நடித்துஇருக்கும் தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமிமஞ்சு, நான் நல்லா பாடுவேன். விஜய்ஆண்டனி என்னை பாட வைக்க வேண்டும் என்றார்.




