காலம் மாறலாம்.. காதல் மாறாது...: சொல்கிறார் மிருணாள் தாக்கூர் | ‛லீடர்' ஆக மாறிய ‛லெஜண்ட்' சரவணன் | பிளாஷ்பேக்: 'அடிமைப் பெண்' திரைப்படம் தந்த ஓர் அற்புதமான பெண் பின்னணிப் பாடகி | முருகன் பாடலை விஜய் உடன் ஒப்பிட்டு பாடிய சர்ச்சை : மன்னிப்பு கேட்ட பாடகர் வேல் முருகன் | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் | விஜய், அஜித், சிரஞ்சீவிக்கு சென்ற ‛சிலம்பாட்டம்' படக் கதை | தனுஷ் 55ல் இணைந்தார் மம்முட்டி | படம் இயக்க தயாராகும் நவ்யா நாயர் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் உச்சத்தை தொட்ட நடிகை | 'நந்தன்' இரண்டாம் பாகம் தயாராகிறது : இயக்குனர் தகவல் |

'சீதாராமம்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையான மிருணாள் தாக்கூர், நடிகர் தனுஷை காதலிப்பதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு இருவர் தரப்பில் இருந்து வெளிப்படையாக மறுப்பு கூட இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ஹிந்தியில் சித்தாந்த் சதுர்வேதியுடன் அவர் நடித்துள்ள 'தோ தீவானே செகர் மெய்ன்' என்ற படம் வருகிற பிப்ரவரி 20ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில், தன்னுடைய கடந்தகால காதல், பிரேக்கப் பற்றி பேசியிருந்தார்.
இந்த நிலையில் அவர் பங்கேற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில் அவரிடம் 'உங்களை பொறுத்தவரை காதல் என்றால் என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மிருணாள், ''காதல் என்பது மிக அழகான உணர்வு. பூமியில் இருக்கும் அனைவருக்கும் அது ஏற்பட வேண்டும். காதல் ஒருவரை சிறந்த மனிதராக மாற்றும் சக்தி கொண்டது. எல்லோருக்கும் அப்படியான காதல் அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். காதலில் மிக முக்கியமானது ஏற்றுக் கொள்ளுதல்.
சில நேரங்களில் காதலை ஏற்றுக் கொள்வதும், அங்கீகரிப்பதும் சிரமமானதாக இருக்கலாம். காதலுக்கான வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருந்தாலும், எப்போதும் காதல் மட்டும் மாறாது. காதலில் இருப்பவர்கள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. நீங்கள் காதலில் இருந்தால், அவர்களிடம் முழுமையாக சரணடையுங்கள்'' எனக் கூறியுள்ளார்.