Advertisement

சிறப்புச்செய்திகள்

8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: 'ஊர்வசி' விருது வென்ற முதல் தென்னிந்திய நாயகியைத் தந்த “துலாபாரம்”

25 ஜன, 2026 - 05:56 IST
எழுத்தின் அளவு:
Flashback-“Thulabharam”-gave-us-the-first-South-Indian-heroine-to-win-the-Urvashi-Award
Advertisement


வேதனை ஒன்றை மட்டுமே பதிவு செய்து, பெரும் சாதனை படைக்க இயலும் என இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்கச் செய்து, புரட்சியை உண்டு பண்ணிய ஒரு அரிய கலைப் படைப்பாக வந்த திரைப்படம்தான் “துலாபாரம்”. படம் பார்ப்போரின் இதயங்களை ரணமாக்கி, கண்களை ஈரமாக்கும் இத்திரைப்படம், முதலில் வெளியானது மலையாள மொழியில்தான். 1968ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தினை இயக்கியவர், அன்றைய தென்னிந்தியத் திரையுலகின் முதன்மை ஒளிப்பதிவாளராக இருந்த ஏ வின்சென்ட்.

இயக்குநர் ஸ்ரீதரின் முதல் திரைப்படமான “கல்யாண பரிசு” திரைப்படத்திலிருந்து “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் வரை அவரது கண்களாகவே இருந்து, காட்சிகளை கவித்துவமாக்கித் தந்த ஒரு கலைநயமிக்க ஒளிப்பதிவாளரான இவரது இயக்கத்தில் வெளிவந்த இந்த “துலாபாரம்” திரைப்படத்தில் நடித்ததற்காகத்தான் நடிகை சாரதாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி, 'ஊர்வசி' சாரதா என அழைக்கப்பட்டார்.

தொழில்நுட்ப தரத்தோடு கூடிய ஒரு சிறந்த கதைக்களத்தில் பயணிக்கும் ஒரு திரைக்கலைஞர், தனது திறமையான நடிப்பாற்றலை வெளிக் கொணர்ந்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த தேசிய விருதினை, மலையாளத் திரையுலகில், அறிமுகமான மூன்றாவது ஆண்டிலேயே அவ்விருதினைப் பெறத் தகுதியான ஒரு திரைக் கலைஞராக நடிகை சாரதாவை அடையாளம் காட்டிய திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “துலாபாரம்”. தோப்பில் பாஸ்கரபிள்ளையின் மலையாள நாடகமான இக்கதையை, மலையாளத்தைப் போலவே தமிழிலும் அதே பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்டனர். 1969ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் பதிப்பான இத்திரைப்படத்தினை தயாரித்தவர் இயக்குநர் டி ஆர் ராமண்ணா. தமிழ் பதிப்பை இயக்கியிருந்ததும் இயக்குநர் வின்சென்ட்டே.

வயலார் ரவி எழுதியிருந்த மலையாளப் பாடல் வரிகளுக்கு தமிழ் வடிவம் தந்திருந்தார் கவியரசர் கண்ணதாசன். “வாடி தோழி கதாநாயகி”, “பூஞ்சிட்டுக் கண்ணங்கள் பொன்மணி தீபங்கள்”, “காற்றினிலே பெரும் காற்றினிலே” என ஜி தேவராஜனின் இசையமைப்பில், படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. கதை, காட்சி அமைப்பு, பாத்திரப் படைப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, பாடல் வரிகள், படத்தில் நடித்திருந்த திரைக்கலைஞர்களின் பங்களிப்பு என அனைத்தும் குறைவின்றி நிறைவாய் இருந்த இத்திரைப்படத்தின் ஒப்பனையாளரின் பங்களிப்பும் அளப்பரியதாகவே இருந்தது. கல்லூரி மாணவி, ஒரு ஏழை தொழிலாளியின் மனைவி, அதன் பின் கணவனை இழந்து, மூன்று குழந்தைகளுடன் வறுமையில் வாடும் ஒரு ஏழைத் தாய் என்ற இந்த மூன்று நிலைகளிலும் நடிகை சாரதாவை காட்சிப்படுத்தியிருந்ததை பார்க்கும் போதே தெரியும் படத்தின் ஒப்பனையாளரின் பங்கு எத்தகையது என்று.

இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய இத்திரைப்படத்தில் நடிகை சாரதா, தான் ஏற்று நடித்திருந்த 'விஜயா' என்ற அந்த கதாபாத்திரத்திற்காக அவர் தந்த பங்களிப்பும், அவர் காட்டிய அற்பணிப்பு உள்ளமும்தான் அவருக்கு தேசிய விருது என்ற ஆகச் சிறந்த விருதினைப் பெறுவதற்கு அவரை தகுதி படைத்தவராகவும், தேசிய விருதினைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமைக்குரியவராகவும் கொண்டு சென்றதோடு, “ஊர்வசி” சாரதா என இந்த உலகுக்கே அடையாளமும் காட்டியது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'தலைவர் தம்பி தலைமையில்' படம்!ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'தலைவர் ... அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் 'குபேரா' நடிகர்! அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap