Advertisement

சிறப்புச்செய்திகள்

‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஒரு வெற்றிப் படத்துடன் ஒதுங்கிய இயக்குனர்

14 ஜன, 2026 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-director-who-retired-with-a-hit-film
Advertisement


சில இயக்குனர்கள் ஒரு படம்தான் இயக்கி இருப்பார்கள். அது மிக நல்ல படமாக இருந்திருக்கும் ஆனால் அதன்பிறகு அவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பார்கள். 'அவள் அப்படித்தான்' படத்தை இயக்கிய ருத்ரய்யா, 'ஏழாவது மனிதன்' படத்தை இயக்கிய ஹரிகரன் போன்றவர்கள் இந்த வரிசையை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர்தான் கணேஷ்ராஜ்.

1992ம் ஆண்டு வெளிவந்த 'சின்னத்தாயி' படத்தின் மூலம் கவனம் பெற்றவர். இந்தப் படத்தில்தான் விக்னேஷ்ராஜா அறிமுகமானார். சபீதா ஆனந்த், நெப்போலியன், வினுசக்ரவர்த்தி, ராதாரவி, பத்மஸ்ரீ, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்தனர்.

ஒரு ஆண்மகனிடம் ஏமாந்து ஒரு குழந்தைக்கு தாயாகும் பெண், தன் மகளும் தன்னைப்போலவே ஆகவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பாக வளர்க்கிறாள். ஆனால் விதி யாரை விட்டது. அவள் மகளும் தாயை போலவே ஒருவனிடம் ஏமாந்து விடுகிறாள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இதனை கிராமிய பின்னணியில் அங்கு நிலவும் ஆணாதிக்கச் சிந்தனையை சொன்ன படம்.

'சின்னத்தாயி' என்றதுமே பலருக்கும் உடனே நினைவிற்கு வரக்கூடிய பாடல் 'கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி' என்கிற பாடல் இளையராஜா இசை அமைத்திருந்தார்.

படம் பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சனரீதியா பாராட்டுகளை குவித்தது. படத்தை இயக்கிய கணேஷ்ராஜ், அதன்பிறகு 'மாமியார் வீடு' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் வரவேற்பை பெறவில்லை. நெப்போலியனை நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'பரணி' என்கிற திரைப்படம், நிதிச்சிக்கலால் வெளியாகவில்லை.

கணேஷ்ராஜ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். கரிசல் காடுகள், அக்கினி அத்தியாயங்கள், கவசம் என்கிற மூன்று சிறுகதைத் தொகுதியையும் 'பொட்டல்' என்கிற நாவலையும் எழுதியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: முதல் காரை பரிசாக வாங்கிய பாகவதர்பிளாஷ்பேக்: முதல் காரை பரிசாக ... தமிழ் சினிமாவில் கடன் இல்லாத ஒரே தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல்ராஜா தமிழ் சினிமாவில் கடன் இல்லாத ஒரே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap