வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெற்றாலோ, அல்லது நல்ல வரவேற்பை பெற்றாலோ படத்தின் இயக்குனருக்கோ, நடிகருக்கோ தயாரிப்பாளர் ஒரு காரை பரிசாக வழங்குவார். சமீபத்தில 'சிறை' படத்தின் இயக்குனருக்கு அதன் தயாரிப்பாளர் படம் வெளிவரும் முன்பே காரை பரிசாக வழங்கினார்.
இந்த வழக்கத்தை தொடங்கி வைத்தவர் தயாரிப்பாளர் லேனா செட்டியார். 'மதுரை வீரன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். தியாகராஜ பாகவதர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது லேனா செட்டியார் பாகவதருடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். ஒரு நாடகத்தில் நடிக்க 50 ரூபாய் சம்பளம். இந்த சம்பளத்தில் 50 நாடகம் நடித்து தர வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.
அதன்படி பாகவதர் தமிழகம்முழுவதும் லேனா செட்டியாருக்காக 50 நாடகங்கள் நடித்துக் கொடுத்தார். 50வது நாடகத்தின் முடிவில் லேனா செட்டியார் பாகதவருக்கு ஃபோர்டு கார் ஒன்று வாங்கி பரிசளித்தார். இந்த காரின் அப்போதைய விலை 2 ஆயிரம் ரூபாய். அதோடு பாகவதரின் சம்பளத்தையும் உயர்த்தினார். படத்திற்கு 500 ரூபாய் சம்பளம் பெற்ற வந்த பாகவதருக்கு 750 ரூபாயாக உயர்த்தினார். உயர்த்தப்பட்ட சம்பளத்தில் அவர் நடித்த படம் 'பவளக்கொடி'.




