Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முழு கடனையும் திருப்பி கொடுத்தால் வெளியிடலாம்: 'வா வாத்தியார்' வழக்கில் கோர்ட் உத்தரவு

13 ஜன, 2026 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Can-be-released-if-the-entire-loan-is-repaid-Court-orders-in-Vaa-Vaathiyaar-case
Advertisement


கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த படத் தயாரிப்பிற்காக அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் என்பவரிடமிருந்து 10.35 கோடியை கடனாக வாங்கியிருந்தார் ஞானவேல்ராஜா. இந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரமாக செலுத்த வேண்டும்.

கடன் கொடுத்த அர்ஜூன்லால் தன்னை திவாலானவராக அறிவித்ததால் அவரது சொத்துக்களை இப்போது சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார். கடனை திருப்பிச் செலுத்தும் வரை, நடிகர் கார்த்தி நடிப்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள 'வா வாத்தியார்' படத்தை வெளியிடக்கூடாது என தடை விதிக்கக்கோரி சொத்தாட்சியர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, படத்தை வெளியிட இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் விதித்தது. மேலும், அந்த படத்தின் மீதான உரிமையை ஏலம் விடவும் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ கிரீன் தரப்பில் 3.75 கோடிக்கான வரைவு காசோலை தாக்கல் செய்யப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தும் பட்சத்தில், 'வா வாத்தியார்' படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில் படத்தை நாளை வெளியிட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: சுஹாசினியுடன் ஆட மறுத்த கமல்பிளாஷ்பேக்: சுஹாசினியுடன் ஆட மறுத்த ... கோல்டன் குளோப் விருது விழா: 4 விருகளை பெற்ற லியார்னடோ டி காப்ரியோ படம் கோல்டன் குளோப் விருது விழா: 4 விருகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap