Advertisement

சிறப்புச்செய்திகள்

சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது

17 டிச, 2025 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Bobby-Simhas-new-film-has-started
Advertisement


'பீட்சா, சூதுகவ்வும்' படங்களில் நடித்த பாபி சிம்ஹா, 'நேரம்' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார், 'ஜிகர்தண்டா' படத்தில் தேசிய விருது பெற்று புகழ்பெற்றார். பெரிய அளவிற்கு வருவார் என்று கணிக்கப்பட்ட பாபி சிம்ஹா, அதன் பிறகு நடிப்பில் ஒரே பாணியை பின்பற்றியதாலும், கதை தேர்வில் சொதப்பியதாலும் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறவில்லை. என்றாலும், தெலுங்கு, தமிழ், மலையாளத்தில் 30 படங்கள் வரை நடித்து விட்டார். கடைசியாக 'இந்தியன் 2' படத்தில் நடித்தார்.

தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். யுவா கிருஷ்ணா தயாரிப்பில் மெஹர் யாரமாட்டி இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹெப்பா படேல் நடிக்கிறார். தனிகல பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார், சித்தார்த் சதாசிவுனி இசை அமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

இதுகுறித்து பாபி சிம்ஹா கூறும்போது, ''ஒரு நடிகனாக எனக்கு இது சவாலான கதை. என் திரைவாழ்க்கையில் இது ஒரு புதிய முயற்சி. சவாலான கதைக்களம் என்பதால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். விசாகபட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது'', என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்குபிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை ... ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)