2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

வெள்ளித்திரை, சின்னத்திரை என அசத்திய நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் அவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு கண்ணீர் மல்க பலர் அஞ்சலி செலுத்தினர்.

ரேபோ சங்கரின் மனைவி ப்ரியங்காவும் சின்னத்திரையில் நடிகையாக உள்ளார். அதேப்போல் மகள் இந்திரஜாவும் நடிகையாக உள்ளார். இந்திரஜாவுக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு நட்சத்திரன் என்ற மகன் உள்ளார். பேரன் நட்சத்திரனுக்கு நாளை(செப்., 20) மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டியில் உள்ள கோவில் ஒன்றில் காது குத்து விழாவும், அதனைத்தொடர்ந்து ஞாயிறு அன்று முதலைக்குளத்தில் உள்ள கருப்பணசாமி கோவிலில் கிடா விருந்தும் ஏற்பாடு செய்து இருந்தார். இந்தச்சூழலில் அவரின் எதிர்பாராத மரணம் அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்திச் சென்றுள்ளது.