பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

வெள்ளித்திரை, சின்னத்திரை என அசத்திய நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் அவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு கண்ணீர் மல்க பலர் அஞ்சலி செலுத்தினர்.

ரேபோ சங்கரின் மனைவி ப்ரியங்காவும் சின்னத்திரையில் நடிகையாக உள்ளார். அதேப்போல் மகள் இந்திரஜாவும் நடிகையாக உள்ளார். இந்திரஜாவுக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு நட்சத்திரன் என்ற மகன் உள்ளார். பேரன் நட்சத்திரனுக்கு நாளை(செப்., 20) மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டியில் உள்ள கோவில் ஒன்றில் காது குத்து விழாவும், அதனைத்தொடர்ந்து ஞாயிறு அன்று முதலைக்குளத்தில் உள்ள கருப்பணசாமி கோவிலில் கிடா விருந்தும் ஏற்பாடு செய்து இருந்தார். இந்தச்சூழலில் அவரின் எதிர்பாராத மரணம் அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்திச் சென்றுள்ளது.