ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

பெரும்பாலும் நடிகைகள் நடிப்பதுடன் ஒரு சிலர் கூடுதலாக போனால் பாடுவது என்பதோடு மட்டும் தங்களது பணிகளை நிறுத்திக் கொள்வார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக மலையாளத்தில் நடிகைகள் சிலர் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கத்திலும் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் என்பவர் தற்போது நடிகர் திலீப் நடித்து வரும் பா பா பா என்கிற படத்திற்கு கதை எழுதி உள்ளார். அதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லோகா சாப்டர் 1 ; சந்திரா படத்தின் வெற்றிக்கு தனது திரைக்கதை அமைப்பால் உறுதுணையாக நின்று இருக்கிறார் நடிகை சாந்தி பாலச்சந்திரன்.
இவர் இந்த படத்தின் மூலம் தான் திரைக்கதை ஆசிரியராக மாறியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2017ல் நடிகர் தனுஷ் மலையாளத்தில் தயாரித்த தரங்கம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சாந்தி பாலச்சந்திரன். அந்த படத்தின் இயக்குனர் டொமினிக் அருண் தான் தற்போது இந்த லோகா சாப்டர் 1 ; சந்திரா படத்தை இயக்கியுள்ளார். அதனால் சாந்தி பாலச்சந்திரனின் கதை உருவாக்கும் திறமையை அறிந்து கொண்டு அவரை இந்த படத்தில் திரைக்கதை எழுத உற்சாகப்படுத்தினாராம். தற்போது படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சாந்தி பாலச்சந்திரன்.




