‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பெரும்பாலும் நடிகைகள் நடிப்பதுடன் ஒரு சிலர் கூடுதலாக போனால் பாடுவது என்பதோடு மட்டும் தங்களது பணிகளை நிறுத்திக் கொள்வார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக மலையாளத்தில் நடிகைகள் சிலர் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கத்திலும் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் என்பவர் தற்போது நடிகர் திலீப் நடித்து வரும் பா பா பா என்கிற படத்திற்கு கதை எழுதி உள்ளார். அதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லோகா சாப்டர் 1 ; சந்திரா படத்தின் வெற்றிக்கு தனது திரைக்கதை அமைப்பால் உறுதுணையாக நின்று இருக்கிறார் நடிகை சாந்தி பாலச்சந்திரன்.
இவர் இந்த படத்தின் மூலம் தான் திரைக்கதை ஆசிரியராக மாறியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2017ல் நடிகர் தனுஷ் மலையாளத்தில் தயாரித்த தரங்கம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சாந்தி பாலச்சந்திரன். அந்த படத்தின் இயக்குனர் டொமினிக் அருண் தான் தற்போது இந்த லோகா சாப்டர் 1 ; சந்திரா படத்தை இயக்கியுள்ளார். அதனால் சாந்தி பாலச்சந்திரனின் கதை உருவாக்கும் திறமையை அறிந்து கொண்டு அவரை இந்த படத்தில் திரைக்கதை எழுத உற்சாகப்படுத்தினாராம். தற்போது படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சாந்தி பாலச்சந்திரன்.




