‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாள திரை உலகில் சமீபத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். 17 உறுப்பினர்களில் மொத்தம் எட்டு பெண்கள் பொறுப்புகளை பிடித்துள்ளனர். இதுவரை நடிகர் சங்கத்தில் ஆணாதிக்க மனோபாவம் இருந்து வந்தது என்று பலர் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது அப்படியே நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. ஆனாலும் இதை சிலரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
குறிப்பாக விக்ரம் நடித்த ‛அருள்' படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் கொல்லம் துளசி நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தபோது பெண்களுக்கு அதிகம் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே என்று கேட்கப்பட்டது.
அதற்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த கொல்லம் துளசி, ‛‛பெண்கள் ஆள்வார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆண்கள் ஆள்வார்கள் என்று நாங்கள் சொல்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறியதுடன், “ஆண் தான் ஆள வேண்டும்.. சரியா ? பெண்கள் அவர்களுக்கு கீழே இருக்க வேண்டும்.. இல்லையா ? ஆண்கள் எப்போதுமே பெண்களை விட ஒரு படி மேலே தான் இருக்க வேண்டும்.. இல்லையா ?'' என்று கூறினார். பின்னர் உடனடியாக, ‛‛இப்போது அவர்கள் எங்களுடைய எதிரிகள் ஆகிவிட்டார்கள். இது நான் சும்மா தமாஷுக்காக சொன்னேன்.. ஓகேவா ?'' என்று கூறியுள்ளார்.
மனதில் இருப்பது தானே வெளியே வரும் என்பதற்கேற்ப அவர் கூறிய இந்த கருத்துக்கள் மலையாள திரையரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இவரது கருத்துக்கு பெருமளவில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.




