வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

கடந்த பிப்ரவரி மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ், விமானம் மூலம் அடிக்கடி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியது. அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிகப்பட்டதை தொடர்ந்து தற்போது அவர் சிறையில் இருக்கிறார். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா படத்தில் கதாநாயகியாக நடித்தது இவர்தான். அது மட்டுமல்ல இவர் கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட.
இவர் இந்த தங்க கடலுக்கு தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் டிஜிபி ராமச்சந்திர ராவ் அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் செல்ல பணிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமைகள் அமலாக்க துறையில் இவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டு அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.