கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

நடிகர் பஹத் பாசில் இன்று மலையாள திரையுலகையும் தாண்டி தென்னிந்திய அளவில் அதிகம் விரும்பப்படும் நடிகராக மாறிவிட்டார். மிகப்பெரிய ரசிகர் வட்டமும் அவருக்கு உருவாகிவிட்டது. அவரை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு தென்னிந்திய அளவில் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் பஹத் பாசில் நடித்த முதல் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட அவருக்கு ஏழெட்டு வருடம் இடைவெளி விழுந்தது. அதன் பிறகு அவர் நடித்த படம் தான் சப்பா குரிசு. இந்தப் படத்தின் வெற்றி பஹத் பாசிலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதை லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்திருந்தார்.
“இதில் நடிக்கும்போது பஹத் பாசில் கடுமையான உழைப்பை கொடுத்தார். அவரிடம் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்டபோது நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என கூறினார். இல்லை தாராளமாக நீங்கள் ஒரு தொகையை சொல்லுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை என்று சொன்னதும், நாங்கள் ஒரு போட்டிக்கு தயாராகி வருவதாகவும் அதற்கு கட்டுவதற்கு 65 ஆயிரம் ரூபாய் தேவை என்றும் அவர் கேட்டார். அப்போது நான் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்தேன். இன்று அவரது உயரம் எங்கேயோ போய்விட்டது. இன்று ஐந்து கோடி, பத்து கோடி கொடுத்தாலும் கூட அவரை படங்களில் ஒப்பந்தம் செய்வது மிகப்பெரிய டாஸ்க் ஆகவே இருக்கிறது, இதுதான் சினிமாவின் மேஜிக்” என்று கூறியுள்ளார்.