என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதற்கு தென்னிந்தியாவில் மட்டுமல்ல பாலிவுட் நடிகர்கள் கூட ஆர்வமாக காத்திருப்பார்கள். அது சின்ன கதாபாத்திரம் என்றாலும் கூட அவரது படத்தில் நடிப்பதன் மூலம் இன்னும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகலாம் என்பதுதான் அதற்கு காரணம், அந்த வகையில் மலையாள திரை உலகில் பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகராக நடித்து வரும் நடிகர் சுரேஷ் கிருஷ்ணா அப்படி மணிரத்னம் படத்தில் தனக்கு நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து அது கைநழுவி போனது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'குட்டி ஸ்ராங்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் நடிப்பும் பிடித்துப் போனதால் இயக்குனர் மணிரத்னம் அந்த சமயத்தில் தான் இயக்க இருந்த 'கடல்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை வரச் சொன்னார். மணிரத்னம் பட வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக அவரை வந்து சந்தித்தேன். அப்போது என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர் நீங்கள் தானா என்று கேட்டார். அதற்கு நானும் நீங்கள் எதிர்பார்த்தது யாரை என்று கேட்டேன். குட்டி ஸ்ராங் படத்தில் நடித்தாரே அவரை தான் என்று கூற, அது நானே தான் சார் என்று கூறினேன். அதன் பிறகு தான் அவர் நம்பினார்.
அந்த படத்தில் எனக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை தருவதாக அவர் கூறினார். நேரம் வரும்போது அழைப்பதாகவும் சொன்னார். ஆனால் அதன் பிறகு மூன்று மாதங்களாக படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. பின்னர் தான் மணிரத்னம் கதையை வேறு விதமாக மாற்றி விட்டார் என்றும் அதில் தனது கதாபாத்திரம் இடம் பெறவில்லை என்பதால் தன்னை அழைக்கவில்லை என்றும் எனக்கு தெரிய வந்தது. அந்த வகையில் மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லையே என்கிற வருத்தம் இப்போதும் எனக்கு இருக்கிறது” என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.
இவர் ரோஜா நடித்த 100வது படமான 'பொட்டு அம்மன்' என்கிற ஒரே ஒரு தமிழில் படத்தில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.