நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை திருக்குறள் என்ற பெயரில் படமாக எடுக்கிறார் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். இவர் ஏற்கனவே காமராஜர் வாழ்க்கையை சினிமாவாக்கி, பாராட்டு பெற்றவர். இதில் புதுமுகம் கலைச்சோழன் திருவள்ளுவராகவும், புதுமுக தன லட்சுமி வாசுகியாகவும் வருகிறார்கள். இதை விட முக்கியமாக பல படங்களில் காமெடியனாக நடித்த கொட்டாச்சி, புலவர் பெருந்தலை சாத்தனாராக வருகிறார். இயக்குனர் சுப்ரமணியம் சிவா, நக்கீரராக நடித்துள்ளார். தங்கள் கெட்அப் போட்டோக்களை இவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த படத்தில் பல போர்க்கள காட்சிகளும், அரசவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. திருக்குறள் படத்தை தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிட வேண்டும். திருவள்ளுவர் வரலாற்றை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், இளையராஜா இசையமைத்து இருக்கும் இந்த படத்துக்கு தமிழக அரசு வியாபாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் உதவ வேண்டும் என்பது படக்குழு விருப்பமாக இருக்கிறது.