நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த படங்களில் பிரேமலு, ரசிகர்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்திய ஒரு திரைப்படம். சின்ன பட்ஜெட்டில், அவ்வளவாக அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து, ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதையை அற்புதமாக கொடுத்திருந்தார் இயக்குனர் கிரிஷ் ஏடி. கதாநாயகியாக நடித்திருந்த மமிதா பைஜூ இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவிலும் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு இந்த படம் அவருக்கு வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. தமிழகத்திலும் பிரேமலு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் அது பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளரும், பிரபல இயக்குனருமான திலீஷ் போத்தன் பிரேமலு 2 படத்தின் தாமதம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “சில காரணங்களால் பிரேமலு 2 படத்தின் வேலைகளை இப்போது துவங்க முடியவில்லை. அது மட்டுமல்ல எப்போது துவங்கும் என்றும் கூட உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம் பிரேமலு படத்தின் இயக்குனர் கிரிஷ் ஏடி தனது அடுத்த படத்தை எங்களது தயாரிப்பிலேயே இயக்க உள்ளார். அந்தப் படம் முடிந்த பிறகு தான் பிரமலு 2 படம் குறித்து யோசிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.