ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன் | அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் | கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு | பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் | 17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த 'வாழ 2' | பேட்ரியாட்டில் நாலு ஹீரோ இல்லை, இரண்டு பேர் தான் : மம்முட்டி | ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் |

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான டிராகன் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து தமிழில் அறிமுகமானவர் கயாடு லோஹர். முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்ததோடு, அவரது நடிப்பும் இளவட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டதால் கோலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகையாகி இருக்கிறார். தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து சிம்பு நடிக்கும் 49 வது படத்தில் நடிக்கப் போகிறார்.
ஒரு பேட்டியில் யாருடன் இப்போது நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள்? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்றாலும் ஹாய் சொல்லும் அளவுக்கு தான் நட்பு வைத்திருக்கிறேன். தேவை இல்லாமல் சுற்றிக் கொண்டு திரியும் ரிலேஷன்ஷிப்பை நான் யாரிடத்திலும் வைத்துக் கொள்வதில்லை. அத்தனை சீக்கிரத்தில் நான் யாரிடத்திலும் சிக்கிக் கொள்ளவும் மாட்டேன். இன்றைக்கு ஒரு ஆண் நண்பர் உடன் சாதாரணமாக நட்பு வைத்தாலே அதற்கு பலதரப்பட்ட அர்த்தம் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதனால் யாருடனும் எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்பிலும் நான் இல்லை. நான் உண்டு, என் வேலை உண்டு என்று மட்டுமே இருக்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார் கயாடு லோஹர்.