ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான டிராகன் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து தமிழில் அறிமுகமானவர் கயாடு லோஹர். முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்ததோடு, அவரது நடிப்பும் இளவட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டதால் கோலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகையாகி இருக்கிறார். தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து சிம்பு நடிக்கும் 49 வது படத்தில் நடிக்கப் போகிறார்.
ஒரு பேட்டியில் யாருடன் இப்போது நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள்? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்றாலும் ஹாய் சொல்லும் அளவுக்கு தான் நட்பு வைத்திருக்கிறேன். தேவை இல்லாமல் சுற்றிக் கொண்டு திரியும் ரிலேஷன்ஷிப்பை நான் யாரிடத்திலும் வைத்துக் கொள்வதில்லை. அத்தனை சீக்கிரத்தில் நான் யாரிடத்திலும் சிக்கிக் கொள்ளவும் மாட்டேன். இன்றைக்கு ஒரு ஆண் நண்பர் உடன் சாதாரணமாக நட்பு வைத்தாலே அதற்கு பலதரப்பட்ட அர்த்தம் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதனால் யாருடனும் எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்பிலும் நான் இல்லை. நான் உண்டு, என் வேலை உண்டு என்று மட்டுமே இருக்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார் கயாடு லோஹர்.