பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

விஜய், அஜித் தமிழ் மீடியாவிடம் பேசி பல ஆண்டுகள் ஆச்சு. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது தங்கள் படங்கள் வெளியாகும் சமயத்தில் இவர்கள் பேசி வந்தனர். அசல் படத்துக்கு பின் மீடியாவினருடன் பேசுவதை அஜித் நிறுத்திவிட்டார். எந்த மீடியாவுக்கு பேட்டி கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். (கார் ரேஸ் குறித்து துபாயில் சமீபத்தில் ஓரிரு பேட்டி தந்தார். டில்லியில் பத்ம பூஷன் விருது வாங்கிவிட்டு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். விஜய் வேலாயுதம் படத்துக்குபின் நிருபர்களை சந்திப்பதை நிறுத்திவிட்டார்.
பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது மட்டும் சில டிவிகளுக்கு பேட்டி கொடுத்தார். மற்றபடி, மேடையில் பேசுவதுடன் சரி. இந்நிலையில் இருவரும் சென்னை ஏர்போர்ட்டில் பேட்டி கொடுத்துள்ளனர். பத்ம பூஷன் விருது வாங்கிவிட்டு சென்னை வந்த அஜித், ஏர்போர்ட் வாசலில் மீடியாவிடம் சில வார்த்தைகள் பேசினார். ஜனநாயகன் படப்பிடிப்புக்காக மதுரை செல்லும் முன்பு சென்னை ஏர்போர்ட் வாசலில் விஜய் பேட்டி கொடுத்துள்ளார். இருவரிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மீடியா, ரசிகர்கள் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த மாற்றம் தொடருமா?




