லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மலையாள திரையுலகில் இயக்குனராக நுழைந்து கோதா, மின்னல் முரளி உள்ளிட்ட படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பஷில் ஜோசப். அதேசமயம் சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து சமீபவருடங்களாக கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகராக வளர்ந்து விட்டார் பஷில் ஜோசப். கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பல நடையில், சூட்சும தர்ஷினி, கிஷ்கிந்தா காண்டம், இந்த வருடம் வெளியான பொன் மான் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அடுத்ததாக தற்போது இவர் நடித்துள்ள மரண மாஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த படம் சவுதி அரேபியா குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.. காரணம் இந்த படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இதனால் அரபு நாடுகளுக்கான சென்சாருக்கு அனுப்பப்பட்ட போது திருநங்கை சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கினால் படத்தை திரையிடலாம் என சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் ஒரு முக்கிய அம்சமாக அந்த திருநங்கை கதாபாத்திரம் இடம் பெற்றிருப்பதால் அந்த காட்சிகளை நீக்க படக்குழுவினர் தயக்கம் காட்டியுள்ளனர். அதனால் இன்று அரபு நாடுகளில் இந்த படம் வெளியாகவில்லை. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவப்பிரசாத் இயக்கியுள்ளார்.