தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

பிரபல தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தை தயாரித்து நடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக இதை உருவாக்கும் நோக்கில் பாலிவுட்டில் இருந்து அக்ஷய் குமார், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்திலிருந்து மோகன்லால் என முன்னணி பிரபல நட்சத்திரங்களை இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். வரும் ஏப்ரல் 25ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளார் விஷ்ணு மஞ்சு.
அதன் ஒரு பகுதியாக நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தை நேற்று நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது விஷ்ணு மஞ்சுவுடன் அவரது தந்தை மோகன் பாபு மற்றும் நடிகர் பிரபுதேவாவும் உடன் இருந்தனர். அப்போது முதல்வருக்கு ஓவியம் ஒன்றை விஷ்ணு மஞ்சு பரிசாக வழங்கினார். முதல்வர் யோகி ஆத்யநாத்தும் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரபுதேவா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் அவரும் இந்த சந்திப்பின்போது கண்ணப்பா குழுவினருடன் இணைந்து சென்று யோகி ஆத்யநாத்தை சந்தித்துள்ளார்.