கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் |

பிரபல தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தை தயாரித்து நடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக இதை உருவாக்கும் நோக்கில் பாலிவுட்டில் இருந்து அக்ஷய் குமார், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்திலிருந்து மோகன்லால் என முன்னணி பிரபல நட்சத்திரங்களை இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். வரும் ஏப்ரல் 25ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளார் விஷ்ணு மஞ்சு.
அதன் ஒரு பகுதியாக நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தை நேற்று நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது விஷ்ணு மஞ்சுவுடன் அவரது தந்தை மோகன் பாபு மற்றும் நடிகர் பிரபுதேவாவும் உடன் இருந்தனர். அப்போது முதல்வருக்கு ஓவியம் ஒன்றை விஷ்ணு மஞ்சு பரிசாக வழங்கினார். முதல்வர் யோகி ஆத்யநாத்தும் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரபுதேவா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் அவரும் இந்த சந்திப்பின்போது கண்ணப்பா குழுவினருடன் இணைந்து சென்று யோகி ஆத்யநாத்தை சந்தித்துள்ளார்.