பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? |

மும்பை : வயது மூப்பு காரணமாக பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் இன்று(ஏப்., 4) காலமானார்.
ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் மனோஜ் குமார், 87. இவர் கடந்த 1937ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்தார். இவர் பெரும்பாலும் நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்தும், இயக்கியும் பிரபலமானவர். இவரை பரத் குமார் என்றும் அழைத்து வருகின்றனர். புராப் அவுர் பஸ்ஜிம், கிரான்டி, ரொட்டி, காபாடா அவுர் மாகான், யாத்கார், பெஹ்சான், மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
1992ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2015ல் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
பா.ஜ.,வில் இணைந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த மனோஜ் குமார், வயது மூப்பு காரணமாக, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து வந்தார். இந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




