பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

விக்ரம் பிரபு நடித்து 2016ல் வெளிவந்த 'வாகா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரன்யா ராவ். 'மானிக்யா, படாகி' ஆகிய கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ரன்யா ராவ் சமீபத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவருடன் அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து விமானத்தில் பெங்களூரு விமான நிலையம் வந்த போது ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். சுமார் 14 கிலோ எடையுள்ள 24 காரட் தங்கத்தை அவர் மறைத்து வைத்து கொண்டு வந்தது சோதனையில் பிடிபட்டது. அவற்றின் மதிப்பு மட்டும் சுமார் 12 கோடி. கடந்த ஆறு மாதங்களில் 27 முறை துபாய் சென்று வந்துள்ளார் ரன்யா.
அவரது வளர்ப்புத் தந்தை ராமச்சந்திர ராவ், கர்நாடக காவல் துறையில் டிஐஜி ஆக இருக்கிறார். அவருக்கும் இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு ஒன்றில் ரன்யாவின் கணவர் ஜதின் ஹுக்கேரி தானும், ரன்யாவும் கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டாலும், டிசம்பர் மாதம் முதல் தனித் தனியாக வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பிரிந்து வாழ்வதாகக் கூறியுள்ளார்.
கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜதின் மீது மார்ச் 24 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ரன்யாவின் ஜாமீன் வழக்கு விசாரணை நாளை நீதிமன்றத்தில் வருகிறது.




