மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார் கார்த்தி. இந்தப்படத்தின் மற்ற பணிகள் நடந்து வருகின்றன. படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்தப்படியாக சர்தார் படத்தின் தொடர்ச்சியாக பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் , ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுஒருபுறம் இருக்க படத்தின் மற்ற பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று(மார்ச் 10) சர்தார் 2 படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை கார்த்தி தொடங்கியுள்ளார். இதுதொடர்பான போட்டோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.