மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

இரு பெரும் இதிகாசங்களான 'ராமாயணம், மகாபாரதம்' ஆகியவற்றைத் தழுவி டிவி தொடர்கள், வெப் தொடர்கள், திரைப்படங்கள் என வந்துள்ளன. 'ராமாயணம்' கதையை பிரபல ஹிந்தி இயக்குனரான நிதிஷ் திவாரி தற்போது 'ராமாயணா' என்ற பெயரில் இரண்டு பாகத் திரைப்படங்களாக எடுத்து வருகிறார்.
ராமாயணத்தை மையமாக வைத்து விதவிதமாக எவை வந்தாலும், 'டிடி நேஷனல்' டிவியில் 1987ம் ஆண்டில் ஒளிபரப்பான 'ராமாயண்' தொடரை மிஞ்சும் அளவுக்கு எதுவும் இதுவரை வரவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் அத்தொடரில் சீதாவாக நடித்த தீபிகா கூறியதாவது, ''ராமாயணத்தை மையமாக வைத்து உருவான ஒரு டிவி தொடரில் கவுசல்யா கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கேட்டார்கள். எனது கணவர் என்னையே முடிவெடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால், எனது சகோதரர், 'நீங்கள் சீதாவாக அறியப்பட்டவர். சாகும் வரை சீதாவாகவே இருக்க வேண்டும், என்று சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது.
இத்தனை ஆண்டு காலமாக ரசிகர்கள் மனதில் நான் சீதாவாகவே இருக்கிறேன். அந்த இமேஜை நான் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும். நான் சீதா தான், அதை ஏற்றுக் கொண்டுள்ளேன். 38 வருடங்களாக மக்கள் என்னை இன்னும் அப்படியேதான் ஞாபகம் வைத்துள்ளார்கள்,'' என்றும் தெரிவித்துள்ளார்.
தீபிகா தமிழில் 'பெரிய இடத்து பிள்ளை, நாங்கள்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.