ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
இரு பெரும் இதிகாசங்களான 'ராமாயணம், மகாபாரதம்' ஆகியவற்றைத் தழுவி டிவி தொடர்கள், வெப் தொடர்கள், திரைப்படங்கள் என வந்துள்ளன. 'ராமாயணம்' கதையை பிரபல ஹிந்தி இயக்குனரான நிதிஷ் திவாரி தற்போது 'ராமாயணா' என்ற பெயரில் இரண்டு பாகத் திரைப்படங்களாக எடுத்து வருகிறார்.
ராமாயணத்தை மையமாக வைத்து விதவிதமாக எவை வந்தாலும், 'டிடி நேஷனல்' டிவியில் 1987ம் ஆண்டில் ஒளிபரப்பான 'ராமாயண்' தொடரை மிஞ்சும் அளவுக்கு எதுவும் இதுவரை வரவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் அத்தொடரில் சீதாவாக நடித்த தீபிகா கூறியதாவது, ''ராமாயணத்தை மையமாக வைத்து உருவான ஒரு டிவி தொடரில் கவுசல்யா கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கேட்டார்கள். எனது கணவர் என்னையே முடிவெடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால், எனது சகோதரர், 'நீங்கள் சீதாவாக அறியப்பட்டவர். சாகும் வரை சீதாவாகவே இருக்க வேண்டும், என்று சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது.
இத்தனை ஆண்டு காலமாக ரசிகர்கள் மனதில் நான் சீதாவாகவே இருக்கிறேன். அந்த இமேஜை நான் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும். நான் சீதா தான், அதை ஏற்றுக் கொண்டுள்ளேன். 38 வருடங்களாக மக்கள் என்னை இன்னும் அப்படியேதான் ஞாபகம் வைத்துள்ளார்கள்,'' என்றும் தெரிவித்துள்ளார்.
தீபிகா தமிழில் 'பெரிய இடத்து பிள்ளை, நாங்கள்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.