கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

பாரதிராஜாவின் இயக்கத்தில் 1983ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கண்ட படம் 'மண்வாசனை'. மதுரையில் மட்டும் ஒரு வருடம் ஓடியது. காரணம் படம் மதுரை மண் வாசனையை பேசியது. இந்த படத்தில் நடிப்பதற்காக மதுரை கோவிலில் வளையல்கடை வைத்திருந்த பாண்டியனை அழைத்து வந்தார். கேரளாவில் இருந்து ரேவதியை அழைத்து வந்தார் பாரதிராஜா. பாண்டியனுக்கு முழுமையான நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார்.
ரேவதியை தேனி பகுதி பெண்களுடன் பழக வைத்து அவர்களின் மேனரிசத்தை கற்றுக் கொள்ள வைத்தார். படத்தின் பல காட்சிகளில் அவர் வெட்கப்பட வேண்டும். குறிப்பாக 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலில் அவர் வெட்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
கிராமங்களில் பெண்கள் பெரியமனுஷியாவது மிகப்பெரிய சடங்கு. படத்தில் முத்துப்பேச்சி (ரேவதி) பெரியமனுஷி ஆகிவிடுவாள். முறைமாமன் வீரணந்தான்(பாண்டியன்) பச்சை ஓலையில் குடிசை போடவேண்டும். அப்போது ஏற்படும் பார்வை, மெல்லியதாக எட்டிப் பார்க்கும் காதல். பிறகு பள்ளத்தில் விழுவார் ரேவதி. அவரை தாங்கி பிடிப்பார் பாண்டியன் தெடர்ந்து 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடல் வரும்.
முறைப்படி பரதநாட்டியம் கற்றிருந்த ரேவதிக்கு வெட்கம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் கேமரா முன் அவருக்கு வெட்கம் வரவில்லை. அதோடு பாண்டியனை கண்டாலே அவருக்கு சிரிப்புதான் வந்தது. இதனால் பாரதிராஜா ஒரு யுக்தியை கையாண்டார். ரேவதி வெட்கப்பட வேண்டிய காட்சியில் பின்னால் நின்று ஒருவர் கேமராவிற்கு தெரியாமல் அவர் இடுப்பில் ஒரு நீளமான புல் கொண்டு உரசுவார், உடனே அந்த கூச்சத்தால் வெட்கப்படுவார் ரேவதி. இப்படித்தான் படத்தில் வரும் ரேவதியின் அனைத்து வெட்கப்படும் காட்சிகளும் படமானது. ரேவதியின் அந்த வெட்கம்தான் ரசிகர்களை தியேட்டருக்கு அள்ளி வந்தது.




