பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

2023ம் ஆண்டில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் '2018' . கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளியான இப்படம் மலையாளம் கடந்து இந்திய அளவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் 2023ம் ஆண்டிற்கான அதிகமான வசூலித்த படமாக இருந்தது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்து தமிழில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இது அல்லாமல் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றைக் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.
தற்போது சிம்புவை வைத்து இயக்கவிருந்த படம் கை மாறியுள்ளது. வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் ஆர்யா தான் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.




