சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

2023ம் ஆண்டில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் '2018' . கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளியான இப்படம் மலையாளம் கடந்து இந்திய அளவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் 2023ம் ஆண்டிற்கான அதிகமான வசூலித்த படமாக இருந்தது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்து தமிழில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இது அல்லாமல் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றைக் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.
தற்போது சிம்புவை வைத்து இயக்கவிருந்த படம் கை மாறியுள்ளது. வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் ஆர்யா தான் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.




