மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
2023ம் ஆண்டில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் '2018' . கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளியான இப்படம் மலையாளம் கடந்து இந்திய அளவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் 2023ம் ஆண்டிற்கான அதிகமான வசூலித்த படமாக இருந்தது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்து தமிழில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இது அல்லாமல் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றைக் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.
தற்போது சிம்புவை வைத்து இயக்கவிருந்த படம் கை மாறியுள்ளது. வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் ஆர்யா தான் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.