'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அதையடுத்து தெறி ஹிந்தி ரீமைக்கை பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்து, தோல்வி அடைந்தார் அட்லி. இந்த நிலையில் அடுத்தபடியாக சல்மான்கான் நடிப்பில் தனது அடுத்த படத்தை அவர் இயக்கப் போவதாகவும், அந்த படத்தில் கமல் அல்லது ரஜினியை முக்கியம் வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால் தற்போது புஷ்பா-2 படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தபடியாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்கப் போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜவான் வெளியான நேரத்தில் அல்லு அர்ஜூனை சந்தித்து அட்லி ஒரு கதை சொல்லி இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.