நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அதையடுத்து தெறி ஹிந்தி ரீமைக்கை பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்து, தோல்வி அடைந்தார் அட்லி. இந்த நிலையில் அடுத்தபடியாக சல்மான்கான் நடிப்பில் தனது அடுத்த படத்தை அவர் இயக்கப் போவதாகவும், அந்த படத்தில் கமல் அல்லது ரஜினியை முக்கியம் வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால் தற்போது புஷ்பா-2 படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தபடியாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்கப் போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜவான் வெளியான நேரத்தில் அல்லு அர்ஜூனை சந்தித்து அட்லி ஒரு கதை சொல்லி இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.