11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி | நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது | பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… | தீபாவளி போட்டியில் 'காந்தா' ? | 14 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் ‛உருமி' இரண்டாம் பாகம் |
தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப் பிரதேச நகரமான கூர்க் தான் அவரது சொந்த ஊர். இருந்தாலும் அவரது சிறு வயதில் சென்னையிலும் வசித்திருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் முதன் முதலில் பார்த்த படம் 'கில்லி' என்றும் அது பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார். “கில்லி' படம் தான் நான் தியேட்டர்ல முதன் முதலில் பார்த்த படம். தியேட்டர்ல நான் பார்த்த முதல் ஹீரோ தளபதி விஜய் தான். அந்தப் படத்துல 'அப்படி போடு அப்படி போடு' பாட்டு இருக்குல்ல, என்னோட வாழ்க்கைல மெஜாரிட்டி நேரம் அந்தப் பாட்டுக்கு நடனமாடியிருக்கேன். எங்க அப்பா ரஜினிகாந்த் படங்கள் நிறைய பார்ப்பாரு. ஆனா, எனக்கு விஜய், த்ரிஷா அவங்களைத்தான் தியேட்டர்ல முதல்ல பார்த்தேன்,” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ராஷ்மிகா குழந்தையாக இருந்தபோது பார்த்து வியந்த விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் ஜோடியாக நடித்துவிட்டார். அப்போது கதாநாயகியாக நடித்த த்ரிஷா, ராஷ்மிகா வளர்ந்து கதாநாயகி ஆன பின்னும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.