கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

கன்னட சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்த மோகன், பாலுமகேந்திராவின் முதல் படமான 'கோகிலா'வில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். முதல் ஹீரோ கமல்ஹாசன். பிறகு 'மூடுபனி' படத்தின் மூலம் பாலுமகேந்திராவால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதில் பிரதாப் ஹீரோ, மோகன் இரண்டாவது ஹீரோ. அதன் பிறகு மகேந்திரன் இயக்கிய 'நெஞ்சத்தை கிள்ளாதே'வில் மோகன்தான் கதையின் நாயகன். ஆனால் டைட்டில் கார்டில் பிரதாப், சரத்பாபுவுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் மோகன் பெயர் இடம் பெற்றது.
முதன் முறையாக முழு திரையில் மோகன் என தனித்து பெயர் வெளியிடப்பட்டது 'கிளிஞ்சல்கள்' படத்தில்தான். இதற்கு முன்பு மோகன் நடித்த படங்கள் வெற்றிப் படங்கள் என்றாலும் கிளிஞ்சல்கள்தான் முதல் வெள்ளி விழா படம். மோகன் ஜோடியாக பூர்ணிமா நடித்தார். இவர்களுடன் திலீப், வி.கே.ராமசாமி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்தனர். துரை இயக்கினார்.
இந்து இளைஞனுக்கும், கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையிலான காதலை பேசிய படம். 'காதலர்கள் தோற்கலாம். காதல் தோற்பதில்லை' என்ற படம். முதன் முதலாக டி.ராஜேந்தர் இசை அமைத்த வெளியான படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. கிளிஞ்சல்கள் இப்போதும் காதலர்களின் பேவரேட் படமாக இருக்கிறது.