சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நடிகர் தனுஷ் தற்போது ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டு கையோடு 'இட்லி கடை' எனும் புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகிறார். 'டாவுன் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
இதன் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி, மதுரை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இட்லி கடை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தனுஷ் மற்றும் படக்குழு பாங்காக் செல்கின்றனர். அங்கு படத்தின் சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.