ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

இந்திய சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு மொழியிலும் நேரடிப் படங்கள்தான் மிக அதிகமாக வெளிவரும். ஆனால், கொரானோ காலகட்டத்தில் ஓடிடியின் வளர்ச்சி ஒரு பக்கம், பான் இந்தியா படங்களின் வருகை ஒரு பக்கம் என டப்பிங் படங்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வர ஆரம்பித்தன.
ஒவ்வொரு மொழியிலும் பெரிய படங்கள் அனைத்துமே நான்கைந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படங்களாக வெளிவருகின்றன. அவற்றில் அனைத்துப் படங்களுக்கும் வெற்றி கிடைத்துவிடுவதில்லை. ஒரு சில படங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கிறது.
அந்த விதத்தில் இந்த வருட தீபாவளிக்கு தமிழ், தெலுங்கில் வெளியான இரண்டு டப்பிங் படங்களுக்கு எதிர்பார்த்ததை விட வரவேற்பும், வசூலும் கிடைத்து லாபத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெளியானது. அங்கு வெளியான நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு இப்படமும் நல்ல வசூலைக் குவித்துள்ளது. அங்கு கடந்த நான்கு நாட்களில் மொத்தமாக 16 கோடி வரை வசூலித்து இப்போதே 4 கோடிக்கும் அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளதாம். இந்த வருடத்தில் தமிழிலிருந்து தெலுங்கில் வெளியான படங்களில் நிறைவான லாபத்தை இந்தப் படம் பெற்றுத் தரும் என்கிறார்கள்.
தெலுங்கில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'லக்கி பாஸ்கர்' படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியானது. 'அமரன்' படம் காரணமாக இந்தப் படத்திற்கு முதலில் நிறைய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சுமார் 150 தியேட்டர்களில்தான் படத்தை வெளியிட்டுள்ளார்கள். படத்திற்கான வரவேற்பும், விமர்சனங்களும் சிறப்பாக இருந்ததால் தற்போது 50க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளதாம். தமிழில் இதுவரையில் சுமார் 4 கோடி வரை வசூலித்துள்ளது என தகவல்கள் வந்துள்ளது. இந்த வசூல் இன்னும் அதிகமாகலாம் என்பதே பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
இரண்டு மொழிகளிலும் மாறி மாறி தலா ஒரு டப்பிங் படம் வசூலித்துள்ளது, நேரடிப் படங்களை வாங்கி வெளியிட்டவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.