கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
இந்திய சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு மொழியிலும் நேரடிப் படங்கள்தான் மிக அதிகமாக வெளிவரும். ஆனால், கொரானோ காலகட்டத்தில் ஓடிடியின் வளர்ச்சி ஒரு பக்கம், பான் இந்தியா படங்களின் வருகை ஒரு பக்கம் என டப்பிங் படங்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வர ஆரம்பித்தன.
ஒவ்வொரு மொழியிலும் பெரிய படங்கள் அனைத்துமே நான்கைந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படங்களாக வெளிவருகின்றன. அவற்றில் அனைத்துப் படங்களுக்கும் வெற்றி கிடைத்துவிடுவதில்லை. ஒரு சில படங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கிறது.
அந்த விதத்தில் இந்த வருட தீபாவளிக்கு தமிழ், தெலுங்கில் வெளியான இரண்டு டப்பிங் படங்களுக்கு எதிர்பார்த்ததை விட வரவேற்பும், வசூலும் கிடைத்து லாபத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெளியானது. அங்கு வெளியான நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு இப்படமும் நல்ல வசூலைக் குவித்துள்ளது. அங்கு கடந்த நான்கு நாட்களில் மொத்தமாக 16 கோடி வரை வசூலித்து இப்போதே 4 கோடிக்கும் அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளதாம். இந்த வருடத்தில் தமிழிலிருந்து தெலுங்கில் வெளியான படங்களில் நிறைவான லாபத்தை இந்தப் படம் பெற்றுத் தரும் என்கிறார்கள்.
தெலுங்கில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'லக்கி பாஸ்கர்' படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியானது. 'அமரன்' படம் காரணமாக இந்தப் படத்திற்கு முதலில் நிறைய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சுமார் 150 தியேட்டர்களில்தான் படத்தை வெளியிட்டுள்ளார்கள். படத்திற்கான வரவேற்பும், விமர்சனங்களும் சிறப்பாக இருந்ததால் தற்போது 50க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளதாம். தமிழில் இதுவரையில் சுமார் 4 கோடி வரை வசூலித்துள்ளது என தகவல்கள் வந்துள்ளது. இந்த வசூல் இன்னும் அதிகமாகலாம் என்பதே பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
இரண்டு மொழிகளிலும் மாறி மாறி தலா ஒரு டப்பிங் படம் வசூலித்துள்ளது, நேரடிப் படங்களை வாங்கி வெளியிட்டவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.