'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் | 50 கோடிக்கு பேரம் பேசும் சிவகார்த்திகேயனின் பராசக்தி | ஓடிடி டீலிங் முடிந்த இட்லி கடை : என்ன விலை தெரியுமா? | 23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
கோட் படத்தை அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசை அமைக்க, முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது. அங்கு நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் விஜய் நடித்த ஓப்பனிங் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு முதல் கட்ட படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் திட்டமிட்டு இருந்த வினோத், 9 நாட்களிலேயே அனைத்து காட்சிகளையும் படமாக்கிவிட்டு திரும்பியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அதாவது காவல் துறையிலிருந்து ஒரு பிரச்னையால் வெளியேறும் விஜய், ஒரு முக்கிய கேஸ் சம்பந்தமாக மீண்டும் போலீஸ் பணியில் சேர்ந்து அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் வகையில் இதன் கதை அமைந்திருக்கிறது. அந்த குற்றவாளி யார்? எப்படிப்பட்ட குற்றம் செய்தவர் என்ற சஸ்பென்ஸ் உடையும்போது மிகப்பெரிய அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்குமாம். அதன் காரணமாகவே இந்த சஸ்பென்ஸ் உடைந்திராத வகையில் அது சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளாராம் எச்.வினோத்.