ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
நடிகர் விஜய் தனது 69வது படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலுக்கு வரப்போகிறார். இதன் காரணமாக அடுத்தபடியாக விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்கிற கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றபோது, அது குறித்து ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அப்போது அவரை நோக்கி அடுத்த தளபதி நீங்கள்தான் என்று ரசிகர்கள் கூறியபோது, அதை மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அவர் கூறுகையில், ''தமிழ் சினிமாவில் ஒரே ஒரு தளபதி தான், ஒரே ஒரு தல தான், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், ஒரே ஒரு உலக நாயகன் தான். அதனால் அடுத்த என்ற பேச்சுக்கே இடமில்லை. இவர்களெல்லாம் நடிப்பதை பார்த்து தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அதனால் அவர்களை போன்று நாமும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் அவர்களாகவே ஆக வேண்டும் என்று நினைப்பது சரி கிடையாது. அது தவறு என்று நான் நினைக்கிறேன்,'' என கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.