தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
நடிகர் விஜய் தனது 69வது படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலுக்கு வரப்போகிறார். இதன் காரணமாக அடுத்தபடியாக விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்கிற கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றபோது, அது குறித்து ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அப்போது அவரை நோக்கி அடுத்த தளபதி நீங்கள்தான் என்று ரசிகர்கள் கூறியபோது, அதை மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அவர் கூறுகையில், ''தமிழ் சினிமாவில் ஒரே ஒரு தளபதி தான், ஒரே ஒரு தல தான், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், ஒரே ஒரு உலக நாயகன் தான். அதனால் அடுத்த என்ற பேச்சுக்கே இடமில்லை. இவர்களெல்லாம் நடிப்பதை பார்த்து தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அதனால் அவர்களை போன்று நாமும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் அவர்களாகவே ஆக வேண்டும் என்று நினைப்பது சரி கிடையாது. அது தவறு என்று நான் நினைக்கிறேன்,'' என கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.