தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆக்ஷன் ஹீரோயின்கள் இருந்திருக்கிறார்கள். விஜயலலிதா முதல் விஜயசாந்தி வரை ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால் இப்போது எல்லா ஹீரோயின்களுமே ஆக்ஷன் ஹீரோயின்கள் தான்.
தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் எஸ்.டி.சுப்புலட்சுமி, புராணபடங்களிலும், பக்தி படங்களிலும், சரித்திர படங்களிலும் நடித்து வந்த எஸ்.டி.சுப்புலட்சுமி 'நவீன சதாராம்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்தார். சதாராம் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்த சுப்புலட்சுமி ஆண் வேடமிட்டு பல சாகசங்களை செய்பவராக நடித்திருந்தார். அவரது வீர தீர செயல்களை பார்த்து அந்த நாட்டு இளவரசிக்கு காதல் வரும். அவர் ஆண் என்பது தெரியாமல் காதலிப்பார். ஆனால் சதாராம் இளவரசனை காதலிப்பார். இதற்கு இடையில் திருடன் ஒருவரும் சதாராமை காதலிப்பார். இப்படி போகும் கதையின் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
இந்த படத்தை கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார். வித்வான் சங்கரலிங்கம் இளவரசனாகவும், பட்டு அய்யர் திருடனாகவும், கே.கே.பார்வதி பாய் இளவரசியாகவும் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். 1935ம் ஆண்டு வெளியான இந்த படம் 'சதாராமே' என்ற பிரபலமான கன்னட நாடகத்தின் ரீமேக் ஆகும்.