காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆக்ஷன் ஹீரோயின்கள் இருந்திருக்கிறார்கள். விஜயலலிதா முதல் விஜயசாந்தி வரை ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால் இப்போது எல்லா ஹீரோயின்களுமே ஆக்ஷன் ஹீரோயின்கள் தான்.
தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் எஸ்.டி.சுப்புலட்சுமி, புராணபடங்களிலும், பக்தி படங்களிலும், சரித்திர படங்களிலும் நடித்து வந்த எஸ்.டி.சுப்புலட்சுமி 'நவீன சதாராம்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்தார். சதாராம் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்த சுப்புலட்சுமி ஆண் வேடமிட்டு பல சாகசங்களை செய்பவராக நடித்திருந்தார். அவரது வீர தீர செயல்களை பார்த்து அந்த நாட்டு இளவரசிக்கு காதல் வரும். அவர் ஆண் என்பது தெரியாமல் காதலிப்பார். ஆனால் சதாராம் இளவரசனை காதலிப்பார். இதற்கு இடையில் திருடன் ஒருவரும் சதாராமை காதலிப்பார். இப்படி போகும் கதையின் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
இந்த படத்தை கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார். வித்வான் சங்கரலிங்கம் இளவரசனாகவும், பட்டு அய்யர் திருடனாகவும், கே.கே.பார்வதி பாய் இளவரசியாகவும் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். 1935ம் ஆண்டு வெளியான இந்த படம் 'சதாராமே' என்ற பிரபலமான கன்னட நாடகத்தின் ரீமேக் ஆகும்.