அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பாலிவுட்டின் பிரபலமான குடும்பம் அமிதாப்பச்சன் உடையது. அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பற்றி அடிக்கடி திருமணப் பிரிவு சர்ச்சை எழுவது வாடிக்கையாகிவிட்டது.
சில தினங்களுக்கு முன்பு விருது விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது மகள் ஆராத்யாவுடன் துபாய் சென்றார் ஐஸ்வர்யா ராய். அப்போது அவர்களை வழக்கம் போல பல புகைப்படக்காரர்கள் படமெடுத்தனர். அந்தப் படங்களில் ஐஸ்வர்யாவின் விரலில் அவரது திருமண மோதிரம் இல்லாமல் இருப்பதை கவனித்து தற்போது சர்ச்சையாக்கி உள்ளனர். எப்போதுமே திருமண மோதிரத்தை அணிந்திருக்கும் ஐஸ்வர்யா இப்போது அணியவில்லையே ஏன் என்றும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது வழங்கப்பட்டது. அம்மா ஐஸ்வர்யா விருது வாங்கியதை மகள் ஆராத்யா மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் இடம் பெற்றுள்ளது. இப்படி ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை தொடர்ந்து பிரிவு, விவாகரத்து என பேசி வருகிறார்கள்.