ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
பாலிவுட்டின் பிரபலமான குடும்பம் அமிதாப்பச்சன் உடையது. அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பற்றி அடிக்கடி திருமணப் பிரிவு சர்ச்சை எழுவது வாடிக்கையாகிவிட்டது.
சில தினங்களுக்கு முன்பு விருது விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது மகள் ஆராத்யாவுடன் துபாய் சென்றார் ஐஸ்வர்யா ராய். அப்போது அவர்களை வழக்கம் போல பல புகைப்படக்காரர்கள் படமெடுத்தனர். அந்தப் படங்களில் ஐஸ்வர்யாவின் விரலில் அவரது திருமண மோதிரம் இல்லாமல் இருப்பதை கவனித்து தற்போது சர்ச்சையாக்கி உள்ளனர். எப்போதுமே திருமண மோதிரத்தை அணிந்திருக்கும் ஐஸ்வர்யா இப்போது அணியவில்லையே ஏன் என்றும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது வழங்கப்பட்டது. அம்மா ஐஸ்வர்யா விருது வாங்கியதை மகள் ஆராத்யா மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் இடம் பெற்றுள்ளது. இப்படி ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை தொடர்ந்து பிரிவு, விவாகரத்து என பேசி வருகிறார்கள்.