ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? |
ஜெய்பீம் படத்தை அடுத்து தற்போது ரஜினி நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி இருக்கிறார் ஞானவேல். அக்டோபர் 10ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில், நேற்று இப்படத்தின் மனசிலாயோ என்ற முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ஜெய்பீம் படத்தைப் போலவே வேட்டையன் படத்தையும் உண்மை கதை அடிப்படையில் இயக்கி உள்ள ஞானவேல், இப்படம் தமிழகத்தில் நடந்த சில என்கவுண்டர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருப்பதாக கூறுகிறார்.
இப்படத்திற்கு பிறகு மறைந்த சரவண பவன் ராஜகோபால் மற்றும் ஜீவ ஜோதி இடையே நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் தனது அடுத்த படத்தை இயக்க போகிறாராம். குறிப்பாக, அவர்களுக்கிடையே நடந்த பிரச்னை மற்றும் ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கப் போகிறாராம் ஞானவேல். ஹிந்தியில் உருவாகும் இந்த படத்திற்கு தோசா கிங் என்று அவர் தலைப்பு வைத்திருக்கிறார் .