நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது வரை அந்த படம் தொடங்கப்படவில்லை. அதோடு அவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கவின், சூரி ஆகியோர் ஹீரோவாக நடிப்பதாகவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் மாநகரம் , ராயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாகவும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.