'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

சினிமா தொடங்கிய காலத்தில் நாயகனும், நாயகியும் வசனங்களால் பேசிக் கொள்வதை விட பாடல்களால் பேசிக்கொள்வதுதான் அதிகம். நாடகத்தில் இருந்த இந்த வழக்கம் சினிமாவிலும் தொடர்ந்தது. அந்த வகையில் 50 பாடல்களுடன் வெளியான படம் 'திரௌபதி வஸ்திராபகரணம்' (திரவுபதியின் ஆடை அலங்காரம்). மகாபாரதத்தின் மிக முக்கிய பகுதியான பாஞ்சலியை துச்சாதனன் துகிலுறியும் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதனையே முழு நேர படமாக எடுத்திருந்தார்கள். 16 பாகங்களை கொண்ட படமாக கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஓடும் படமாக வெளிவந்தது.
தமிழ் சினிமாவின் முதல் நாயகியான டி.பி.ராஜலட்சுமி திரௌபதியாக நடித்தார். அன்றைய புகழ்பெற்ற பாடகர் வி.ஏ.செல்லப்பா துரியோதனனாக நடித்தார். செருகளத்தூர் சாமா கிருஷ்ணராக நடித்தார். மற்றும் பி.எஸ்.சிவபாக்யம், வாசுதேவ பிள்ளை, பந்துலு அய்யர் உள்ளிட்ட பலர் நடித்தனர். சேலம் ஏஞ்சல் பிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. முழு படமும் கொல்கத்தா பயனியர் பிலிம் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு வெளியானது.




