சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
சினிமா தொடங்கிய காலத்தில் நாயகனும், நாயகியும் வசனங்களால் பேசிக் கொள்வதை விட பாடல்களால் பேசிக்கொள்வதுதான் அதிகம். நாடகத்தில் இருந்த இந்த வழக்கம் சினிமாவிலும் தொடர்ந்தது. அந்த வகையில் 50 பாடல்களுடன் வெளியான படம் 'திரௌபதி வஸ்திராபகரணம்' (திரவுபதியின் ஆடை அலங்காரம்). மகாபாரதத்தின் மிக முக்கிய பகுதியான பாஞ்சலியை துச்சாதனன் துகிலுறியும் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதனையே முழு நேர படமாக எடுத்திருந்தார்கள். 16 பாகங்களை கொண்ட படமாக கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஓடும் படமாக வெளிவந்தது.
தமிழ் சினிமாவின் முதல் நாயகியான டி.பி.ராஜலட்சுமி திரௌபதியாக நடித்தார். அன்றைய புகழ்பெற்ற பாடகர் வி.ஏ.செல்லப்பா துரியோதனனாக நடித்தார். செருகளத்தூர் சாமா கிருஷ்ணராக நடித்தார். மற்றும் பி.எஸ்.சிவபாக்யம், வாசுதேவ பிள்ளை, பந்துலு அய்யர் உள்ளிட்ட பலர் நடித்தனர். சேலம் ஏஞ்சல் பிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. முழு படமும் கொல்கத்தா பயனியர் பிலிம் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு வெளியானது.