திருமண செய்தி : திவ்யா ஸ்பந்தனா கோபம் | மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி தரும் நந்திதா தாஸ் | 'லியோ 2, தி கோட் 2' - எதிர்காலத்தில் வருமா? | பவன் கல்யாண் நன்றிக்கு நன்றி தெரிவித்த சிம்பு | பிளாஷ்பேக் : வாய்ப்பளித்த எம்.ஜி.ஆர் ; வாழ்த்துப் பாடலால் நன்றி சொன்ன வாலி | டிரென்டிங் போட்டியில் 'மட்ட Vs மனசிலாயோ' | செப்டம்பர் 13, நாளை ஒரே ஒரு ரிலீஸ் | அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் படம் நிறைவு | பிளாஷ்பேக் : நான்கு காலகட்டங்களில் ரீமேக்கான படம் | சித்தர் வாக்குப்படி உருவான 'கடைசி உலகப் போர்' |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களைக் தொடர்ந்து தற்போது இரண்டு குழந்தை நட்சத்திரங்களை வைத்து 'வாழை' எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது மாரி செல்வராஜ்-ன் இளம் வயதில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தை பார்த்த பல திரைப் பிரபலங்கள் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் இன்று திரைக்கு வரும் வாழை திரைப்படத்தை பார்த்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அதன்படி, "சிரிக்கவும், கைத்தட்டவும், அழுகுவதற்கும் தயாராக இருங்கள். உங்களைக் கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழைய தயாராக இருங்கள். உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடப்படும் அழகான படமாக வாழை உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துகள்", என பதிவிட்டுள்ளார்.