'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களைக் தொடர்ந்து தற்போது இரண்டு குழந்தை நட்சத்திரங்களை வைத்து 'வாழை' எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது மாரி செல்வராஜ்-ன் இளம் வயதில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தை பார்த்த பல திரைப் பிரபலங்கள் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் இன்று திரைக்கு வரும் வாழை திரைப்படத்தை பார்த்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அதன்படி, "சிரிக்கவும், கைத்தட்டவும், அழுகுவதற்கும் தயாராக இருங்கள். உங்களைக் கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழைய தயாராக இருங்கள். உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடப்படும் அழகான படமாக வாழை உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துகள்", என பதிவிட்டுள்ளார்.




